ஜன்னல் தோட்டத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பவர்கள், மூலிகைச் செடிகளையும்
வளர்க்கலாம். குறிப்பாக இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு, அகத்தி, ஆடுதிண்டாப்
பாளை, ஆடாதொடை, இஞ்சி, ஊமத்தை, எலுமிச்சை, துளசி, ஓமவல்லி, கண்டங்கத்திரி,
கரிசலாங்கண்ணி, பிரண்டை, கீழாநெல்லி, சிறுகுறிஞ்சான், திருநீற்றுப்
பச்சிலை, தூதுவளை, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி உள்ளிட்ட மூலிகை பயிர்களை
வளர்ப்பதன் மூலம், காமாலை, இருமல், காய்ச்சல், கண்புகைச்சல், வாய்ப்புண்
போன்ற நோய்களை தவிர்க்கவல்ல பல்வேறு விதமான பயிர்களை வீட்டிலேயே
வளர்க்கலாம். பின்விளைவுகள் இல்லாத இயற்கை மருந்துகள் எளிதாக நமது வீட்டு
மாடியிலேயே கிடைக்கும். மேலும், வீட்டில் வளர்க்கும் மூலிகைப் பயிர்களின்
வாசம் நம் வீட்டிற்கு மட்டுமின்றி, அண்டை வீடுகளுக்கும் வீசுவதால், உடல்
சுவாசத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.
No comments:
Post a Comment